அரசியல் சித்தாந்தத்தை மறந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிப்போம் – ரோசி சேனாநாயக்க
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே மேயர் இதனை தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் சித்தாந்தத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டை மீட்பதற்கு தேவையான ஆதரவை வழங்க தயாராக இருக்க வேண்டும் எனவும் மேயர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை