இலங்கை கடற்படை, விமானப்படைக்கு எரிபொருளை வழங்க அவுஸ்திரேலியா இந்தியாவுடன் இணைந்து செயற்படுகிறது..

இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருள் வழங்குவதற்கு அவுஸ்திரேலியா இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் பெளல் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருளை வழங்குவதற்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் அவுஸ்திரேலியா மகிழ்ச்சியடைகிறது. இது நாடுகடந்த குற்றங்களுக்கு எதிரான நமது நீண்டகால ஒத்துழைப்பு தொடர உதவும். இந்தியப் பெருங்கடல் அண்டை நாடுகளாக, பிராந்திய பாதுகாப்பைப் பாதுகாப்பதில் மூன்று பிராந்தியங்களும் உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்கின்றன என கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் ட்வீட் செய்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.