நீர் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல் !

நீர் மற்றும் கழிவுநீர் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

இது தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவித்தலை நீர் வழங்கல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த வாரம் வெளியிட்டார்.

இதன்படி வீட்டு தேவைகளுக்கான நீர் நுகர்வுக்கு முதல் ஐந்து அலகுகளுக்கு 20 ரூபாவும், சேவைக் கட்டணமாக 300 ரூபாவும் விதிக்கப்படும்.

ஆறு முதல் 10 அலகுகளுக்கு பயன்படுத்துவதற்கு ஒரு அலகுக்கு 27 வசூலிக்கப்படும் அதே நேரத்தில் சேவைக் கட்டணம் 300 ரூபா அறிவிடப்படும்.

11 முதல் 15 அலகுகளுக்கு ஒரு அலகுக்கு 34ரூபா சேவைக் கட்டணம் 300 ரூபா அறிவிடப்படும்.

16 முதல் 20 அலகுகளை உபயோகிக்கும் வீட்டு உபயோகிப்பாளர்களுக்கு அலகு ஒன்றிற்கான கட்டணம் 68 ரூபா,சேவை கட்டணம் 300 ரூபா

26 முதல் 30 அலகுகள் வரை பயன்படுத்தும் உள்நாட்டுப் பயனர்களுக்கு அலகு ஒன்றுக்கு 150 ரூபாவும் சேவைக்கட்டணமாக 900 ரூபாவும் அறவிடப்படும்.

31 முதல் 40 அலகுகளுக்கு ஒரு அலகு கட்டணம் 179 ரூபா.

41-50 அலகுகளுக்கு அலகு ஒன்றுக்கு 204 ரூபாய் சேவைக் கட்டணம் 2,400 ரூபா ஆகவும் விதிக்கப்படும்.

ஒரு மாதத்தில் 51 முதல் 75 அலகுகளை பயன்படுத்தினால் ஒரு அலகுக்கு 221 ரூபா, சேவைக் கட்டணம் 2,400 ரூபா.

ஒரு மாதத்தில் 75 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் உள்நாட்டு பயனர்களுக்கு அலகு ஒன்றுக்கு 238 ரூபாவும் சேவைக்கட்டணம் 3500 ரூபாவும் அறிவிடப்படும்.

இந்தநிலையில் நுகர்வோர் தங்களின் நீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

30 நாட்களுக்குள் நீர் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தத் தவறினால் இக் கட்டண மதிப்பில் 2.5 சதவீதம் கூடுதல் கட்டணம் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.