ஐக்க மக்கள் சக்தி – ஜீ.எல்.பீரிஸ் குழு வாக்கெடுப்பில் இருந்து விலக தீர்மானம்

பாராளுமன்றத்தில் இன்று (02) நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான  ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகியிருக்க, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிஸ் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று முன்தினம், எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்து சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த தான் உட்பட 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.