நூலிழையில் உயிர் தப்பிய மாணவர்

எல்பிட்டிய பிரதான வீதியில் எல்பிட்டிய நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் மிதி பலகையில் இருந்து பாடசாலை மாணவர் ஒருவர் தவறி விழுந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இன்று (14) காலை பாடசாலை ஆரம்பிக்கும் முன்னர் குறித்த பேருந்து எல்பிட்டிய டிப்போவுக்கு அருகில் வேகமாக பயணித்துள்ளது. பேருந்தின் மிதி பலகையில் பயணம் செய்த குறித்த மாணவர் திடீரென தவறி தரையில் விழுந்துள்ளார்.

விபத்தில் குறித்த மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில்  எல்பிட்டிய ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது

14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே விபத்தில் காயமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.