சீனத் தூதுவர்,பிரதமர் சந்திப்பு: இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடல்

சீனாவின் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலான தொடர்ச்சியான ஆதரவை இலங்கை அரசாங்கம் மிகவும் மதிக்கின்றது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று அலரிமாளிகையில் பிரதமர் சந்தித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு மேலதிகமாக 400,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ளதாகத் தூதுவர், உடனடித் தேவைகளின் பட்டியலை வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தணிக்க சீனா வழங்கிய உதவிகளுக்கு

பிரதமர் நன்றி தெரிவித்தார்.

ஐநா மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச மன்றங்களில் இலங்கையின் இறையாண்மைக்கு ஆதரவான சீனாவின் நிலைப்பாடு குறித்தும் பிரதமர் விசேடமாக குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று இருதரப்பு உறவுகள் குறித்து திருப்திகரமான குறிப்புடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டது. இச்சந்திப்பின் போது, ​​தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

பொருளாதார பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வுகளை வழங்குவதற்காக விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் துறைகளில் நேரடி தனியார் முதலீடுகள் மற்றும் முதலீடுகளை இலங்கை வரவேற்கும் என பிரதமர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் கலந்துரையாடல்களின் முன்னேற்றம் தொடர்பில் சீனத் தூதுவர் திருப்தி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தில் சீனாவும் அங்கம் வகிக்கிறது என சுட்டிக்காட்டிய தூதுவர், சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இலங்கைக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.