கொழும்பில் ஏற்பட்ட பதற்றம்! காவல்துறை குவிக்கப்பட்டு கண்ணீர்ப்புகைத் தாக்குதல்
உயர் பாதுகாப்பு வலய பிரகடனத்திற்கு எதிராக மருதானை – டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போராட்டத்தால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் சற்றுமுன் போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
மேலும் போராட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியில் பெருந்திரளான காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்
கருத்துக்களேதுமில்லை