ரணிலுக்கு நடந்தது என்ன -குழப்பத்தில் முக்கிய கட்சியின் பொதுச் செயலாளர்

நாட்டு மக்களின் மனித உரிமைகளை மீறி செயற்படும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு என்ன நடந்தது என்பது குறித்து எதுவும் தெரியவில்லை என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணிலுக்கு நடந்தது என்ன -குழப்பத்தில் முக்கிய கட்சியின் பொதுச் செயலாளர் | What Happened To Ranil

போராட்டக்காரர்களுக்கு எதிராக அடக்குமுறை

 

போராட்டம் ஊடாக அதிபரான ரணில் விக்ரமசிங்க, காகத்துடன் இணைந்து போராட்டக்காரர்களுக்கு எதிராக அடக்குமுறைகளை பிரயோகித்து வருகிறார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ரணிலுக்கு நடந்தது என்ன -குழப்பத்தில் முக்கிய கட்சியின் பொதுச் செயலாளர் | What Happened To Ranil

 

இதுவொரு மோசமான செயல். குறிப்பாக நாட்டு மக்களின் மனித உரிமைகளை மீறும் செயற்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.