ஜனாதிபதி மாளிகை: தொல்லியல் ஆய்வு நிறைவு

 

கடந்த ஜூன் 9 ஆம் திகதி போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை மீதான விசாரணையை தொல்பொருள் திணைக்களம் நிறைவு செய்துள்ளது.

இந்த அறிக்கையை கூடிய விரைவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைகளின் போது ஜனாதிபதி மாளிகையின் கட்டமைப்பு, அங்கு வைக்கப்பட்டுள்ள வரலாற்று தொல்பொருட்கள் மற்றும் ஓவியங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தொல்பொருள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.