அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!

அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என வெளியாகிய செய்திகள் தொடர்பில் நிதியமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரச ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளத்தில் அரைவாசி தொகை மாத்திரம் வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

 

முன்னர் வெளியான செய்தி

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..! | Sri Lanka Govt Employees Will Receive Half Salary

இந்நிலையில், எதிர்வரும் மாதம் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுனில் வட்டகல கடந்த வராம் தெரிவித்திருந்தார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியிருந்தார்.

அரசாங்கத்திடம் பணம் இல்லாததே இதற்குக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், இந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.