கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்..! யாழில் கைது செய்யப்பட்ட இருவர்..

யாழில் போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹெரோயின், மற்றும் ஐஸ் போதைப்பொருள் , மற்றும் போதை ஏற்றுவதற்குரிய பொருட்களுடன் குறித்த இருவரும் யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கோப்பாய் பகுதியில்

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்..! யாழில் கைது செய்யப்பட்ட இருவர் | Drug Usage In Jaffna Police Arrest Two Men

காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பகுதியில் வைத்து இருவரும் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 2 கிராம் ஐஸ் போதைப்பொருள் , ஒன்றரை கிராம் ஹெரோயின் , 10 ஊசி சிரிஞ் , தேசிக்காய் , லைட்டர் , தீப்பெட்டி உள்ளிட்ட போதை ஏற்ற பயன்படுத்தப்படும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.