இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு ஐ.நா எச்சரிக்கை!!!!

உலகளாவிய நெருக்கடிகளால் இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு கடன் நிவாரணம் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நாடுகளின் செயலற்ற தன்மையின் அபாயங்கள் பயங்கரமானவையாக இருக்கும் எனவும் ஐ.நாவின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வறுமை நிலை மேலும் மோசமடையும் என்பதுடன், காலநிலை மாற்றம் மற்றும் அதன் தீவிரத்தன்மையை குறைப்பதற்கான முதலீடுகள் மேற்கொள்ளப்படாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.