வெலிபென்ன பரிமாற்றத்தில் வெள்ளம்; வாகன போக்குவரத்துக்கு தடையா!!..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (E-01) வெலிபென்ன பரிமாற்றத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அதன் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த வழியாக இலகு ரக வாகனங்கள் வெளியேறுவதும், உள்ளே செல்வதும் தடைபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாற்றுப்பாதை 4 அடி வெள்ள நீரில் ஓரளவு மூழ்கியுள்ளது.

இதேவேளை, மழையுடன் கூடிய காலநிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் வாகனங்களை குறைந்த வேகத்தில் செலுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.