இலங்கை கடற்றொழிலாளர்கள் 5 பேர் இந்திய கடற்படையினரால் கைது

இலங்கை கடற்றொழிலாளர்கள்

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்றொழிலாளர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கடற்றொழிலாளர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை கைது செய்ததோடு, அவர்கள் மீன் பிடியில் ஈடுபட்ட படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர் , அண்டனி ஹேமா நிஷாந்தன், இம்மானுவேல் நிக்சன், துருவந்தா சிறிலால், சுதீஷ் சியான் உள்ளிட்ட கடற்றொழிலாளர்களையே இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

எல்லையை தாண்டிய மீன்பிடி

 

இவர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த நிலையில் கடற்படையினரிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தூத்துக்குடி தருவைக்குளம் கடற்கரைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவர்களிடம் கடலோர காவல் படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.