பெண் ஒருவரின் தந்திரமான செயல்! சமயோசித புத்தியால் தப்பிய தொழிலதிபர்

தொழிலதிபர் ஒருவரை மிரட்டி அவரிடம் கப்பமாக பெருந்தொகையான பணம் கோரிய பெண் உள்ளிட்ட கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பெண்ணையும் அவருக்கு உதவி செய்த மற்றொருவரையும் கைது செய்துள்ளதாக களுத்துறை பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

பேருவளை பகுதியைச் சேர்ந்த குறித்த தொழிலதிபர் செய்த முறைப்பாட்டையதையடுத்தே களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவர்களை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பொலிஸ் விசாரணைகளின் மூலம்   குறித்த தொழிலதிபர் வணிக நோக்கத்திற்காக இந்தியா சென்றிருந்தபோது மேற்படி பெண் அவரை சந்தித்து நட்பு கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

கையும் களவுமாக சிக்கிய பெண்

பெண் ஒருவரின் தந்திரமான செயல்! சமயோசித புத்தியால் தப்பிய தொழிலதிபர் | Woman Threatened Businessman And Demanded Money

பின்னர் இருவரும் இந்தியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவைக் கழித்துள்ளனர், அவர்கள் நெருக்கமாக இருக்கும் வீடியோவை அந்த பெண் கைபேசியில் இரகசியமாக பதிவு செய்துள்ளார். இருவரும் இந்த நாட்டிற்கு வந்த பிறகு அந்த பெண் தொழிலதிபரை தொடர்பு கொண்டு குறித்த வீடியோவை காட்டியுள்ளார்.

70 இலட்சம் ரூபாய் பணம் தரவில்லை என்றால் வீடியோவை தொழிலதிபரின் மனைவிக்கு அனுப்புவதாக மிரட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.