பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இராஜினாமா…

அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்றத்தி(18) அறிவிக்கப்பட்டது.

சபை நடவடிக்கை இன்று(18) முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  இந்த விடயத்தை சபையில் அறிவித்தார்.

இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்