பூசணி அறுவடையால் ரூ.17 இலட்சம் வருமானம் பொலன்னறுவை விவசாயி!

 

பொலன்னறுவை மகாவலி B வலயத்தின் நாகஸ்தன்ன கிராமத்தில் ஒரு ஏக்கரில் பூசணி (வட்டக்காய்) பயிர் செய்த விவசாயி ஒருவர் 17 இலட்சம் ரூபாவை ( 1.7 மில்லியன் ரூபா) வருமானமாகப் பெற்றுள்ளார்.

பூசணி அறுவடையிலிருந்து இரண்டரை மாதங்களுக்குள் அவருக்கு இந்தத் தொகை கிடைத்துள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சாமர சேனாரத்ன என்பவரே இரண்டரை மாதங்களில் பூசணி அறுவடை மூலம் இத்தொகையை வருமானமாக பெற்றதாக பிரதேச விவசாய முகாமையாளர் விஜேசுந்தர தெரிவித்தார்.

தான் சுமார் ஒரு ஏக்கரில் பூசணி விதைகளைப் பயிரிட்டு, தம்புள்ளை சந்தைக்கு ஒரு கிலோகிராம் பூசணிக்காயை 160 ரூபாவுக்கு விற்றதாகவும், இரண்டரை மாதங்களுக்குள், பூசணி அறுவடையில் மேற்படி தொகையை ஏறக்குறைய பெற்றுக்கொண்டதாகவும் அவ் விவசாயி குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.