மரணித்தவருக்கு அஞ்சலி செலுத்திய குரங்கு – மட்டக்களப்பில் நடந்த அதிசயம் !

மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்தில் குரங்கு ஒன்று ஏஜமான் உயிரிழந்ததையடுத்து அவரின் சடலத்தின் மீது ஏறி அவரை கட்டியணைத்து அழுது புலம்பியதுடன் அவரின் இறுதி கிரிகை நடந்த மயானத்திற்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் நேற்று (18) அனைவரையும் கண்கலங்கவைத்ததுடன் பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தாளங்குடா பிரதேசத்தினைச் சேர்ந்த 56 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான பீதாம்பரம் ராஜன் காட்டிலிருந்து வந்த குரங்கு ஒன்றிற்கு உணவு வழங்கிவந்துள்ளார் குறித்த குரங்கும் தினமும் அவரது வீட்டிற்கு வந்ததும் அவர் அதற்கு பிஸ்கட்டுகளை வழங்குவதுடன் அவரின் வலது குறைந்த பிள்ளையை அறையிலிருந்து குரங்கு இழுத்துவந்து அந்த பிள்ளையுடன் பிஸ்கட் சாப்பிடுவது வழக்கம்,

இந்த நிலையில் நேற்றுமுந்தினம் திங்கட்கிழமை(17) இரவு சுகயீனம் காரணமாக அவர் திடீரென உயிரிழந்ததையடுத்து அவரின் வீட்டில் இறுதி கிரிகைகள் நேற்று செவ்வாய்க்கிழமை செய்வதற்கு உறவினர்கள் சடலத்தை வைத்தியசாலையில் இருந்து கொண்டுவந்து வைத்தபோது அங்கு வந்த குரங்கு அவர் சடலமாக இருப்பதை பார்த்து அவரின் பக்கம் சென்று அவருக்கு மூச்சு உள்ளதா எனச் சோதித்து அவரின் சட்டையைப் பிடித்து இழுத்துப் பல முயற்சிகளைச் செய்தது.

ஆனால் அவர் படுக்கையிலிருந்து எழும்பாததையடுத்து குரங்கு கண்ணீர் விட்டு அழுததுடன் அவரின் காலை தொட்டுக் கும்பிட்டு அவரின் அருகில் தொடர்ந்து அமர்ந்தது.

அங்கு இறுதி கிரிகையில் கலந்துகொள்ள வந்த உறவினர்கள் குரங்கின் செயலை கண்டு கண்ணீர்விட்டு அழுததுடன் குரங்கு அருகிலிருந்து செயற்பட்ட காட்சிகளைப் பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

அதேவேளைச் சடலத்தைப் புதைப்பதற்காக மயானத்துக்குக் கொண்டு சென்ற நிலையில் குரங்கு அங்குச் சென்று தனக்கு உணவு தந்தவருக்கு நன்றி உணர்வுடன் அஞ்சலியைச் செலுத்தியுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.