அம்பாறையில் வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல் சம்பந்தமான செயலமர்வு
Helvetas நிறுவனமும் GAFSO நிறுவனமும் இனணந்து நடத்திய வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல் மற்றும் முரண்பாடுகளைத் தவிர்த்தல் சம்பந்தமான செயலமர்வு கடந்த வியாழக்கிழமை(13) அம்பாறை கோப்-இன் ஹொட்டலில் இடம்பெற்றது.வளவாளராக பிரகீத் கலந்து கொண்டதுடன் கெப்சோ நிறுவனம் சார்பாக அதன் திட்ட பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்டாட் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் முரண்பாடு மற்றும் வன்முறை தீவிரவாதம் சார் முரண்பாடுகளைத் தவிர்த்தல் மற்றும் சமூக நல்லிணக்கம் சம்பந்தமான பயிற்சி வழங்கப்பட்டது.இதில் நான்கு இனங்களையும் சேர்ந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.மேலும் எதிர்காலத்தில் சமூக நல்லிணக்கம் சார்ந்து இவ்விளைஞர்கள் பிரதேச மட்டத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதும் குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை