களுத்துறையில் வெள்ளியன்று நீர் வெட்டு.

களுத்துறை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (21) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வாதுவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை (வடக்கு/தெற்கு), நாகொட, பொம்புவல, பிலமினாவத்தை, பயாகல, மக்கொன, பேருவளை, அளுத்கம, தர்கா நகர், பெந்தர ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
மின்சார சபை மற்றும் நீர் வழங்கல் சபையின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.