சதொசவில் 6 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ பூண்டு 60 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ பூண்டின் புதிய விலை 490 ரூபாய் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு கிலோ ரொட்டி மாவு 55 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 375 ரூபாயாக இருந்த ஒரு கிலோ மாவின் புதிய விலை 320 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கடவை பருப்புவின் விலை 30 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 285 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 15 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 260 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 5 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 169 ரூபாய் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

1500 ரூபாயாக இருந்த ஒரு கிலோ நெத்திலியின் விலை 50 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1450 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.