எல்ல கிறீன்லேண்ட் தோட்டத்தில் இந்துக் கோவில் கொடிக்கம்பம் உடைப்பு -செந்தில் தொண்டமான் தலையீட்டால் தீர்வு!…
எல்ல கிறீன்லேண்ட் தோட்டத்தில் பாரம்பரியமாக மக்களால் 1931 ஆம் ஆண்டிலிருந்து வழிபாடு செய்யப்பட்டு வந்த மரத்தடி இந்துக் கோவில் கொடிக்கம்பம் வனவிலங்கு திணைக்களத்தினரால் உடைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து இவ்விடயம் தொடர்பில் அத்தோட்ட மக்களால் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
செந்தில் தொண்டமான் இது குறித்து பொலிஸ் அதிகாரி,அரச அதிகாரி மற்றும் இந்து கலாசார அமைச்சுடன் கலந்துரையாடி, அவரது தலையீட்டால் 1 மணித்தியாலத்துக்குள் மீண்டும் கோவில் கொடிக்கம்பம் நாட்டப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை