எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டு..! மூன்று இந்திய மீனவர்கள் கைது!!

எல்லை தாண்டி மீன் பிடித்த மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த மூன்று இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுள்ளார்கள்.

கைதானவர்களை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.