ரயில் அட்டவணையில் திருத்தம்
இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில், கடலோரப் பாதையில் காலை அலுவலக ரயில்களின் இயங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கரையோரப் பாதையில் ரயில்களை இயக்குவதில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு கோட்டைக்கும் பாணந்துறைக்கும் இடையிலான புகையிரத பாதைகள் மோசமான நிலையில் காணப்படுவதால் வேகத்தடைகளை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு புகையிரத கால அட்டவணையை திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன்படி இன்று முதல் கரையோரப் புகையிரதத்தின் காலை அலுவலக புகையிரதங்களின் ஓட்ட நேரம் திருத்தப்படவுள்ளதுடன், 10 தொடக்கம் 15 நிமிடங்கள் வரை பயண நேரம் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய திருத்தப்பட்ட ரயில் அட்டவணையின்படி முந்தைய ரயிலின் நேரத்திற்கு 10 அல்லது 15 நிமிடங்களுக்கு முன்னதாக ரயிலை இயக்க திட்டமிடப்பட்டு, முன்னேற்றத்தை ஆய்வு செய்த பின், பிற்பகல் அலுவலக ரயில் கால அட்டவணையும் திருத்தப்பட உள்ளது.
கருத்துக்களேதுமில்லை