யாழில் வீதியில் குப்பை வீசுவோரை காட்டிக்கொடுத்தால் சன்மானம்

யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகளை வீசுவோர் தொடர்பான வீடியோ அல்லது புகைப்பட பதிவுகளுடன் யாழ்.மாநகர சபைக்கு முறையிட்டால் குப்பை வீசியோருக்கு விதிக்கப்படும் தண்டத்தில் 10 வீதம் சன்மானமாக வழங்கப்படும் என யாழ்.மாநகர சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்களின் குடியிருப்புகளுக்கு முன்னுள்ள வீதியோரத்தை அவர்கள் தூய்மையாகப் பேண வேண்டும்.

வீதியோரங்கள் பற்றையாக உள்ளமையால் அதற்குள் குப்பைகளை வீசிவிட்டுச் செல்கின்றார்கள்.

அதற்கு அவ்வீதியிலுள்ள மக்களே பொறுப்புக் கூற வேண்டும் என்றும், அவ்வாறு தூய்மையாகப் பேணாவிடின் அவர்களிடமிருந்து ரூபா 3000.00 குற்றப்பணமாக அறவிடுவது எனவும் மாநகர முதல்வர் வி. மணிவண்ணனால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் சபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.