நல்லிணக்கத்துக்கான புதிய அமைச்சரவை உப குழுவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நல்லிணக்கத்துக்கான அமைச்சரவை உப குழுவை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான பிரேரணையை முன்வைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உப குழு அமைக்கப்படவுள்ளது.


நல்லிணக்கத்துக்கான அமைச்சரவை உபகுழு இலங்கையிலுள்ள பல்வேறு பிரிவு மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற மோதலின் பின்னர் மக்கள் எதிர்நோக்கும் மீள்குடியேற்றம், காணி மற்றும் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைப்பது குறித்தும் கவனம் செலுத்தும்.

நல்லிணக்கத்துக்கான அமைச்சரவை உபகுழு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது:

தினேஷ் குணவர்தன – பிரதமர்
டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி அமைச்சர்
கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
அலி சப்ரி – வெளியுறவு அமைச்சர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.