ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு பிணை

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தமை குறித்து கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் நான்கு சந்தேகநபர்கள், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு கொழும்பு – கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது, சந்தேகநபர்களை 5 இலட்சம் ரூபா மதிப்பிலான சரீரப் பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம், சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் முன்னேற்றத்தை, நீதிமன்றுக்கு அறிக்கையிடுமாறு, பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.