சாகசம் செய்த உந்துருளியால் ஏற்பட்ட துயரம்..! பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவி

விபத்து

உந்துருளியும் துவிச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் 10 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (22) பிற்பகல் குளியாபிட்டிய கிரிமெடியாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

முன்னால் வந்த உந்துருளி சாகசங்களை செய்துக் கொண்டு வந்ததால், தான் துவிச்சக்கரவண்டியில் இருந்து பாய்ந்ததாக உயிரிழந்த மாணவியுடன் சென்ற பெண் தெரிவித்துள்ளார்.

 

விசாரணை

சாகசம் செய்த உந்துருளியால் ஏற்பட்ட துயரம்..! பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவி | Accident School Girl Death

இதன்போது, உந்துருளி துவிச்சக்கரவண்டியை மோதிச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.