யாழ்மாவட்டத்தில் யுத்தகாலத்தில் பாதிப்படைந்த மக்களுக்கானநடமாடும்சேவை!!

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின்  எற்பாட்டில்  கடந்த யுத்த காலத்தில் இருந்து  யாழ்மாவட்டத்தில்  இழப்பீடுகள், காயமடைந்தவர்களுக்கான ஆவணங்கள் பெறுவதில் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் முகமாகவும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு  மீளவும் வருகை தந்துள்ள மக்கள் தமது ஆவணங்களை இலகுபடுத்தும் முறையிலான நடமாடும் சேவை  இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியது
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது..
இந்நிகழ்வில் நீதி அமைச்சர் நீதி அமைச்சர் செயலாளர் வசந்தபெரேரா, நீதி அமைச்சர் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் சமுர்த்தியசிங்க,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்,மேலதிக செயலாளர் ம.பிரதீபன்,காணி மேலதிக செயலாளர் செ.முரளிதரன்,பிரதேசசெயலாளர்கள்மற்றும் ஏனைய அமைச்சுக்களின் அதிகாரிகள் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.