தனுஷ்கவுக்கு நீதிமன்றம் பிணை மறுப்பு!!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்ககுணத்திலகவின் பினை கோரிக்கையினை ஆஸ்திரேலியா நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனையடுத்து அவர் தொடர்ந்தும் காவல்துறை தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தனுஷ்ககுண திலகமீது நான்கு பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக விலங்குடன் சிட்னி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இதன் போது தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக மாத்திரம் தனுஷ்க குணத்திலக நீதிமன்றத்தில் பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அவர் ஒரு வெளிநாட்டு பிரஜை என்பதால் அவரது பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக, அவர் ஒரு திருத்த மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் காவல்துறையும் அவருக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.