இலங்கைத் தமிழர்களே கப்பலில் இருந்து மீட்பு!!

இலங்கையிலிருந்து சென்றவேளை மூழ்கி கொண்டிருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தாம் இலங்கைத்தமிழர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

மியான்மர் கொடியுடன் கனடா செல்லும் நோக்கில் இவர்கள் சென்றதாகவும் எனினும் நவம்பர் 5 ஆம் திகதி, தெற்கு கடற்கரையில் வுங் டவுவிலிருந்து 258 கடல் மைல் தொலைவில், ​​கப்பலின் இயந்திர அறை வெள்ளத்தில் மூழ்கியதை அடுத்து , கப்பல் மூழ்கும் நிலைக்கு சென்றுள்ளது.

இலங்கைத் தமிழர்களே கப்பலில் இருந்து மீட்பு(படங்கள்) | Rescued From The Ship By Sri Lankan Tamils

 

இதனால் கப்பலில் பயணித்த 303 பேரின் நிலை கேள்விக்குறியானது.

இந்த நிலையிலேயே ஜப்பானிய கப்பலொன்று கபபலில் இருந்தவர்களை மீட்ட நிலையில் அவர்கள் தற்போது வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 இலங்கைத் தமிழர்களே கப்பலில் இருந்து மீட்பு(படங்கள்) | Rescued From The Ship By Sri Lankan Tamils

இந்த கப்பலில் 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.