தனுஷ்க குணதிலக்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் — விளையாட்டுத்துறை அமைச்சு அதிரடி அறிவிப்பு!
சர்ச்சைக்குரிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்தில் சந்தேக நபராக மட்டுமே உள்ளார், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிராக இலங்கை தனது அனைத்து சட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தனுஷ்க குணதிலக்க ஒரு கிரிக்கெட் வீரர் எனவும், அவர் விளையாட்டு அமைச்சரால் அனுமதிக்கப்பட்டு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்டவர் எனவும் தெரிவித்தார்.

“எங்கள் பொறுப்பில் இருந்து நாங்கள் தப்பிக்க முடியாது, அவர் ஒரு பிரச்சனைக்கு முகம் கொடுத்தால், நாங்கள் அவருக்காக ஆஜராக வேண்டும், அவர் தனது விருப்பத்துடனும் அறிவுடனும் இந்த தவறை செய்திருந்தால், அவருக்காக வழங்கிய சட்ட உதவிக்கான அனைத்து செலவுகளையும் அவர் செலுத்த வேண்டும்.
பொதுப் பணத்தைச் செலவழித்து, அவரது தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு உதவ எங்களுக்கு அதிகாரம் இல்லை,” என்றார்.
“தனுஷ்கா மீது குற்றச்சாட்டுகள் மட்டுமே உள்ளன, எனவே அவர் இன்னும் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஒரு விவாதத்தின் போது, நீதி அமைச்சர் அலி சப்ரி, அவர் ஒரு சந்தேக நபர் மட்டுமே, குற்றவாளி அல்ல என்று கூறினார்.
ஆனால் அவர் ஏதேனும் தவறு செய்திருந்தால், அவர் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். அதற்கான பொறுப்பு” அவருக்குரியது என்று சில்வா கூறினார்.
“அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அவர் இலங்கை கிரிக்கெட் (CLC) சபைக்கு ஏற்படும் அனைத்து செலவுகளையும் தீர்க்க வேண்டும். விளையாட்டு என்று வரும்போது ஒழுக்கம் அவசியம், மேலும் எங்கள் கௌரவத்தை பாதுகாக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று சில்வா வலியுறுத்தினார்.












கருத்துக்களேதுமில்லை