விஷேட அதிரடிப்படையினரின் முற்றுகையில் சிக்கிய சந்தேக நபர்கள்!!

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுவந்த குழுவினரை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பொகவந்தலாவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவை இராணிகாடு மானெளி வனப்பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல்அகழ்வில் ஈடுபட்டுவந்த 19 நபர்களை இன்று(15) நுவரெலியா விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விஷேட அதிரடிப்படையினரின் முற்றுகையில் சிக்கிய சந்தேக நபர்கள் | Sri Lanka Police Bogavanthalava Nuwaraeliya Stf

இதேவேளை சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் விஷேட அதிரடிப்படையினரினால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட 19 நபர்களும் ஹட்டன் தலைமை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் பொகவந்தலாவை கொட்டியாகலை, கெம்பியன், இராணிகாடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.