இணைந்த கரங்கள் உறவுகளினால் கருநாட்டுக்கேணி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு….

மிகவும் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்து வரும் கொக்கிளாய் பிரதேசத்தில் உள்ள மு/கருநாட்டுக்கேணி அ.த.க பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வைனது பாடசாலையின் அதிபர் திரு.எஸ். கிரோசன் தலைமையில் 16/11/2022 (புதன் கிழமை)இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன மத வேறுபாடுகள் இல்லாமல் ஏழை மாணவர்களை இனம் கண்டு இணைந்த கரங்கள் உறவுகள் ஊடாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்படுகின்றது. மேலும் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில் இடை விடாது நம் பயணத்தின் நோக்கத்தையும்,நம் மாணவச்செல்வங்களின் வலியையும் உணர்ந்து இணைந்த கரங்களின் குறிக்கோளை நாலாதிசையும் முன்னகர்த்தி பயணித்து கஷ்ட பிரதேச பாடசாலை மாணவர்களை இனங்கண்டு நம் மாணவச்செல்வங்களின் கற்றலையும்,சிறந்த மனோநிலையையும் உருவாக்குவோம் என்று உறுதியுடன் கூறிக்கொள்கிறேன். என தனது கருத்தினை தெரிவித்தார். மேலும் கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மற்றும் இணைந்த கரங்கள் இணைப்பாளர்களான திரு. பெ.விவேகானந்தன், திரு.கோ.சிவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்க

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.