சுதந்திர தினத்தை முன்னிட்டு பூங்காக்கள் இலவசம்; திரையரங்குக்கு 50 சதவீத கட்டணம்

பெப்ரவரி 4, 2023 அன்று 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து தேசிய பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் ஓய்வு பூங்காக்களுக்குள் இலவச நுழைவுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

அன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் கட்டணத்தை 50 சதவீதம் குறைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது .

இது தொடர்பான பிரேரணை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.