சாமிகவிற்கு ஒரு வருட தடையும் அபராதமும்

இலங்கை அணியின் சகலதுறை வீரர் சமிக கருணாரட்ணவிற்கு  எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைளை அறிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஒரு வருட தடையை விதித்துள்ளதுடன் 5000 அமெரிக்க டொலர் அபராதத்தையும் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை  மேலும் தெரிவித்துள்ளதாவது

அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் இடம்பெற்ற ரி20 உலக கிண்ணப்போட்டி தொடரின் போது வீரர்களிற்கான ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் பலவற்றை மீறியமை தொடர்பில் இலங்கை அணியின் வீரர் சாமிக கருணாரட்ணவிற்கு எதிராக மூன்று பேர் கொண்ட குழு  ஒழுக்காற்று விசாரணையை மேற்கொண்டது.

சாமிக கருணாரட்ண இழைத்த தவறுகளின் பாரதூர தன்மையை கருத்தில் கொண்டு விசாரணை குழு  இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்று குழு குறிப்பிட்ட வீரர் எதிர்காலத்தில் மேலும் மீறல்களில் ஈடுபடுவது குறித்து எச்சரிக்கவேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

மேலும் வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை செலுத்தாத  தண்டனையை விதிக்குமாறும் விசாரணை குழு பரிந்துரைத்துள்ளது.

விசாரணை குழு தெரிவித்த  விடயங்கள் மற்றும் பரிந்துரைகளின் தொடர்ச்சியாக -ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்று குழு அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாடுவதற்கு ஒரு வருட தடையை விதித்துள்ளதுடன்  குறிப்பிட் தடை ஒரு வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இடைநிறுத்தப்பட்டதடைக்கு மேலாக 5000 அமெரிக்க டொலர் அபாராதமும் விதிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.