வடக்கு கிழக்கின் அதிகாரப் பகிர்வு யோசனை- ரணிலிடம் சமர்ப்பிக்க தீர்மானம்

புதிய அரசியலமைப்பின் ஊடாக 03 யோசனைகளை சிறிலங்கா அதிபரிடம் ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பிக்க வடக்கின் தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இந்த தீர்மானங்களில், வடக்கு கிழக்கில் அதிகாரப் பகிர்வு, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல் போன்ற 03 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். ஆர். சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (25) பிற்பகல் நடைபெற்ற வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடலில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகார பகிர்வு

 

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், எஸ். ஸ்ரீதரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் கலந்துரையாடலில், “வடக்கு கிழக்கில் காணி கையகப்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி, சுவீகரிக்கப்பட்ட காணிகளை உடனடியாக தமிழ் மக்களுக்கு வழங்குதல், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வரல்.”  உள்ளிட்ட 3 யோசனைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.