மாவீரர் குடும்பங்களுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வு யாழ். கைதடி- உதயசூரியன் சனசமூக நிலையத்தில் இன்று பிற்கபலில் இடம்பெற்றது.

மாவீரர்களின் 6ஆம் நாள் நினைவஞ்சலி நிகழ்வும், மாவீரர் குடும்பங்களுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வு யாழ். கைதடி- உதயசூரியன் சனசமூக நிலையத்தில் இன்று பிற்கபலில் இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது 30 மாவீரர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும், தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.