மீசாலை தெற்கு மதுவன் சனசமூக நிலையதில் விழிப்புணர்வு மற்றும் உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வுகள்.

சாவகச்சேரி நிருபர்
சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் டெங்கு மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள் கடந்த 27/11 ஞாயிற்றுக்கிழமை மீசாலை தெற்கு மதுவன் சனசமூக நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் மதுவன் சனசமூக வளாகத்தில் அமைந்துள்ள முன்பள்ளிச் சிறார்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றிருந்தனர்.அதனைத் தொடர்ந்து டபிள்யூ. ஈ.சி கல்லூரியின் அனுசரணை மூலம் மதுவன் சனசமூக நிலையச் செயற்பாட்டிற்கான பண உதவி,முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் ஆகியனவும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.நிகழ்வில் பிரதம விருந்தினராக W.E.C கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் உ.சிசில் றெமின்டஸ் கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் சுன்னாகம் லயன்ஸ் கழகச் செயலாளர் லயன். ஹரிகரன் உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.