வேம்பிராய் பொது மயானத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை.
சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரிப் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வேம்பிராய் பொது மயானத்தை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தினை சாவகச்சேரிப் பிரதேசசபை ஆரம்பித்துள்ளது.
பிரதேசசபையின் 20இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் புதிய எரி கொட்டகை மற்றும் மயானத்திற்கான உள்ளக வீதி ஆகியன அமைக்கப்படவுள்ள நிலையில் 29/11 செவ்வாய்க்கிழமை பிரதேசசபைத் தவிசாளர் க.வாமதேவன் தலைமையிலான குழுவினர் மயானத்திற்கு கள விஜயம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.இதன்போது சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் பாலமயூரன்,நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கிஷோர்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் விஜயம் மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை