அவுஸ்திரேலியாவில் 90 வயது மூதாட்டியால் மரணமான இலங்கை மாணவன்!!

அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணமான 90 வயது மூதாட்டி மீது இதுவரை எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கல்வின் விஜிவீர (17) என்ற 12ஆம் ஆண்டு மாணவன் கடந்த வியாழக்கிழமை சாலையில் சென்ற போது 90 வயது மூதாட்டி ஓட்டி வந்த கார் மோதி உயிரிழந்தார்.

அவுஸ்திரேலியாவில் மரணமான இலங்கை மாணவன் - வெளியாகிய புதிய தகவல் | Sri Lankan Student Dies In Australia

 

கல்வின் மரணம் அவர் குடும்பத்தாரை உலுக்கியுள்ளது. அதிலும் சிங்கப்பூரில் இருந்த கல்வின் சகோதரி ஓவிடிக்கு சகோதரரின் மரண செய்தி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு பறந்து வந்த அவர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இது தொடர்பில் அவர் கூறுகையில்,

சிறப்பான வாழ்க்கைக்காக 2008 இல் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தோம். என் சகோதரர் கல்வினுக்கு பொறியாளர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது.

அவுஸ்திரேலியாவில் மரணமான இலங்கை மாணவன் - வெளியாகிய புதிய தகவல் | Sri Lankan Student Dies In Australia

நான் வீட்டிற்கு வந்து கதவு அருகே நின்ற போது என் அம்மாவும் அப்பாவும் கதறி அழுது கொண்டிருந்தார்கள் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையில் 90 வயது மூதாட்டி எப்படி கார் ஓட்ட அனுமதிக்கப்பட்டார் என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

அவர் மீது எந்தவொரு வழக்குப்பதிவும் இன்னும் செய்யவில்லை என தெரியவந்துள்ளது. Superintendent அதிகாரி றொபேட் ரொண்டன் கூறுகையில், இது ஒரு சோகமான சம்பவம். விபத்து விசாரணைப் பிரிவு என்ன நடந்தது என்பதை விசாரிக்கிறது என கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.