உலக சாதனை புரிந்த அம்பாறை சிறுமி

அம்பாறை மருதமுனையைச் சேர்ந்த மின்ஹத் லமி என்ற இரண்டரை வயதுச்சிறுமி 120 உலக நாடுகளின் தலை நகரங்களை வெறுமனே இரண்டு நிமிடத்தில் மிக வேகமாக கூறி உலக சாதனை புத்தகத்தில் (international book of world record) தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

உலகின் 120 நாடுகளின் தலை நகரங்களை வெறும் இரண்டு நிமிடத்தில் கூறிய உலகின் முதலாவது சிறுமியாக பதிவாகியுள்ளார்.

உலக சாதனை புத்தக நிறுவனம் இச்சிறுமியின் திறமையையும், அதீத நினைவாற்றலையும் பரிசீலனை செய்து உலக சாதனை சிறுமியாக அறிவித்து இவருக்கான இலட்சினை, பதக்கம், மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.