எதிர்க்கட்சிகளின் பாசாங்குத்தனம் தெரிகிறது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டமோ அல்லது திறனோ பிரதான எதிர்க்கட்சியிடம் இல்லை என்பது தெளிவாகிறது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் போது பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிர்வாகம் தற்போது வங்குரோத்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு செயற்படுவதாகவும், அதேவேளை மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு தலைப்பையும் அரசியலாக்குவதுடன் அரசாங்கத்தின் திட்டங்களை நாசப்படுத்துவதாக தெரிவித்தார்.

சில பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களால் எதிர்க்கட்சிகளின் பாசாங்குத்தனம் தெரிகிறது.

அரசாங்கத்தின் வருவாயை அதிகரிப்பதற்கு முன்மொழிந்து சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது உரைகளை ஆரம்பிப்பதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தமது உரையின் நடுவில், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வரி மற்றும் வரிகளை அதிகரிக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கோருவதாகவும், அவர்கள் சம்பளம் மற்றும் ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி விவாதத்தை முடித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான அறிக்கைகளின் மூலம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நெருக்கடிகளை அரசியலாக்குவதில் மாத்திரம் கவனம் செலுத்துகின்றார்கள் என்பதும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அக்கறை காட்டுவதில்லை என்பதும் புலனாகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.