அலரிமாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்த நபர் கைது!

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி அலரிமாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர் பம்பலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

40 வயதுடைய சந்தேகநபர் சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவர்.

பம்பலப்பிட்டி பொலிஸார் மற்றும் கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.