சர்வதேசத்தில் இலங்கையின் தலையெழுத்தை மாற்றப்போகும் பனைக்கள்

இலங்கையிலிருந்து 25,000 பனை மரக்கள் போத்தல்கள் அடங்கிய கொள்கலன் ஒன்று பிரான்சுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச்சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் இருந்து பனை மரக்கள் போத்தல்கள் ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதல் முறை என்றும்,இந்த ஏற்றுமதி மூலம் சுமார் 45,000 டொலர்களை சம்பாதித்துள்ளதாகவும் வாரியம் குறிப்பிட்டுள்ளது.

பனை மரக்கள் போத்தல்கள் வடக்கு பிராந்தியத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்தில் இலங்கையின் தலையெழுத்தை மாற்றப்போகும் பனைக்கள் | Srilanka Drink Prices In Economic Crisis

 

மேலும் பனை மரக்கள் போத்தல்கள் தற்போது அமெரிக்கா, கனடா மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சர்வதேசத்தில் இலங்கையின் தலையெழுத்தை மாற்றப்போகும் பனைக்கள் | Srilanka Drink Prices In Economic Crisis

 

கனடாவிற்கு அதிகளவு பனை மரக்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், எதிர்காலத்தில் தென்னிலங்கையில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் பனை அபிவிருத்தி சபை குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.