தீவனப் பற்றாக்குறை; இலங்கை பொலிஸ்துறை ஏழு மாதங்களில் ஏழு குதிரைகளை இழந்துள்ளது

இலங்கை பொலிஸ் மவுண்டட் பிரிவு தீவனப் பற்றாக்குறையால் ஏழு குதிரைகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

ஒரு குதிரை தீவனப் பற்றாக்குறையினால் ஏற்பட்ட உள் காயங்களினால் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய குதிரைகள் போசாக்கின்மை காரணமாக பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

“பெப்ரவரி, ஏப்ரல், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்த இறப்புகள் நிகழ்ந்தன. ஒவ்வொரு குதிரையும் சுமார் 35,000 அமெரிக்க டொலர்கள் மதிப்புடையது, தற்போது சுமார் 50 குதிரைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன என அவர் கூறியுள்ளார்.

.அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக பதப்படுத்தப்பட்ட கால்நடை தீவனம் மற்றும் தீவனங்களுக்கான மூலப்பொருட்கள் உட்பட பல இறக்குமதிகளை இலங்கை அரசு தடை செய்துள்ளது, உர இறக்குமதி தடையால் உள்ளூர் தீவன உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரூபாய் வீழ்ச்சியடைந்த பிறகு, கால்நடை தீவன இறக்குமதியாளர்கள் போராடி வருகின்றனர். பின்னர் தடை ஓரளவு நீக்கப்பட்டது.

இறக்குமதி தடையால் வணிக வங்கிகள் கடன் கடிதங்களை திறக்க மறுத்தன. கிடைக்கும் அந்நிய கையிருப்பு நாட்டிற்கு எரிபொருள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்ய ஒதுக்கப்பட்டது.

வைத்தியர்களின் அறிக்கையின்படி, தீவனம் இல்லாததால் ஏற்பட்ட உள் காயங்களால் ஒரே ஒரு குதிரை மட்டுமே இறந்துள்ளது. மற்ற குதிரைகள் நோய்களால் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவியுள்ளன . எவ்வாறாயினும், நோய்க்கான காரணம் என்ன என்பதை பொலிஸ்-மவுண்டட் பிரிவு விசாரிக்கும் என்று தல்துவ மேலும் கூறினார்

“அனைத்து குதிரைகளும் ஐரோப்பா அல்லது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவை என்பதால் அவர்கள் சில ஆராய்ச்சிகளைச் செய்யப் போகிறார்கள், மேலும் குதிரைகளின் இறப்புக்கான காரணங்கள் என்ன என்பதை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். சில சமயங்களில் ஐரோப்பிய குதிரைகள் காலநிலை மாற்றத்தால் நோய்வாய்ப்படும். மேலும் இந்த குதிரைகள் நோய்வாய்ப்பட்டதால், எடுக்கும் உணவின் அளவைக் குறைத்திருக்கலாம். எவ்வாறாயினும், காரணங்களை அடையாளம் காண ஆழமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தல்துவ. மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.