தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் நுவரெலியாவிலும் பாதிப்பு

 

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களின் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து ஞாயிற்றுக்கிழமை(11) மாலை 4 மணி முதல் திங்கட்கிழமை (12) நள்ளிரவு 12 மணி வரை தபால் நிலைய ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நுவரெலியா பிரதான தபால் அலுவலகம் மற்றும் நானுஓயா தபால் அலுவலகங்கள் செயலிழந்து காணப்படுகின்றன.

எனினும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தபால் சேவை மற்றும் அலுவலக கடிதப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியாத நிலையும், பல்வேறு தேவைகளின் பொருட்டு தபால் நிலையத்துக்கு வருகை தந்த பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.