அடகுக் கடை உடைக்கப்பட்டு 02 கோடி பெறுமதியான பணம் மற்றும் தங்கம் கொள்ளை

அநுராதபுரம் – மாத்தளை சந்தி பகுதியில் அடகு கடையொன்றில் இருந்து சுமார் 02 கோடி ரூபா பணம் மற்றும் தங்கம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றிரவு (11) இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர்கள் சுவரை உடைத்து உள்ளே நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெரா தரவு அமைப்பையும் சந்தேகநபர்கள் அகற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.