சாவகச்சேரியில் 8அடி முதலை!

யாழ்.தென்மராட்சி சாவகச்சேரி சிவன்கோவிலடிப் பகுதியில் 8 அடி நீளமான முதலை பிடிக்கப்பட்டுள்ளது.

முதலை இன்று காலையில் ஊருக்குள் புகுந்த நிலையில் அப்பகுதி இளைஞர்கள் அதனைப் பிடித்துள்ளனர்.

அதனை அடுத்து கிளிநொச்சி வன வனவளத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த வனவளத்துறை அதிகாரிகள் முதலையை இரணைமடு குளத்தில் விடுவதற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.