கொடிகாமம்-வரணியில் இரு ஆலயங்களில் திருட்டு.
சாவகச்சேரி நிருபர்
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப் பகுதியில் உள்ள இரண்டு ஆலயங்களில் 14/12 புதன்கிழமை இரவு திருட்டு இடம்பெற்றிருப்பதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரணி-குடமியனில் அமைந்துள்ள ஐயப்ப ஆலயத்தில் இரண்டு பவுண் நகை திருடப்பட்டதுடன்-உண்டியலும் உடைக்கப்பட்டிருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அதேசமயம் வரணி-இயற்றாலை பகுதியில் அமைந்துள்ள புற்றுக் கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.முறைப்பாட்டின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை